செய்திகள்,திரையுலகம் நாகார்ஜுனாவின் அறையில் இருந்து அழுதுகொண்டே ஓடிய சமந்தா…

நாகார்ஜுனாவின் அறையில் இருந்து அழுதுகொண்டே ஓடிய சமந்தா…

நாகார்ஜுனாவின் அறையில் இருந்து அழுதுகொண்டே ஓடிய சமந்தா… post thumbnail image
ஹைதராபாத்:-மூன்று தலைமுறை நடிகர்களான நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் ஒன்றாக நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார் நாகார்ஜுனா. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஸ்ரேயா, சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு முக்கிய டுவிஸ்ட் உள்ளது. இந்த டுவிஸ்ட்டை படக்குழுவினர் மிக ரகசியமாக படமெடுத்தனர். சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தவிர வேறு யாருக்கும் இந்த டுவிஸ்ட் தெரியாது. ஆனால் நேற்று சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டுவிஸ்ட் குறித்த விபரங்களை பதிவு செய்து ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டார். இதனால் டென்ஷனான நாகார்ஜூனா சமந்தாவை கூப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்துடன் சமந்தா அழுதுகொண்டே நாகார்ஜுனா அறையில் இருந்து வெளியே ஓடிவந்ததை படக்குழுவினர் அதிர்ச்சியோடு பார்த்துள்ளனர்.

படப்பிடிப்பு முடியும்வரை படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் யாரும் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கமே போகக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம் நாகார்ஜுனா. அதனால் எல்லோரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களுக்கு தற்காலிக மூடுவிழா நடத்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி