செய்திகள் டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்…

டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்…

டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்… post thumbnail image
புதுடெல்லி:-புதுடெல்லியில் 28 வயதான பெண் ஒருவர் ஓடும் காரிலேயே தனது நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அந்த ஆண் நண்பருடன் மேலும் இருவரும் உடனிருந்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபின் அப்பெண் சாலையோரம் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அவரை அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தான் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்கள் மூவரும் தன்னை தாக்கியதாக அப்பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை பலாத்காரம் செய்த நபரை பார்க்கசென்றபோது தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அவர் அழைத்து சென்றுவிட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி