செய்திகள் காதலியை பிரிந்தார் பிரான்ஸ் அதிபர்…

காதலியை பிரிந்தார் பிரான்ஸ் அதிபர்…

காதலியை பிரிந்தார் பிரான்ஸ் அதிபர்… post thumbnail image
மும்பை:-பிரான்சு நாட்டின் அதிபராக பதவி வகிப்பவர் பிரான்சிஸ்கோ ஹோலண்டே(59). 4 குழந்தைகளின் தந்தையான இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பிறகு இவருக்கும், வலேரி டிரேயர்வெல்லர்(48) இடையே நட்பு ஏற்பட்டு திருமணம் செய்யாமல் தம்பதியராக வாழ்ந்தனர். வலேரியும் விவாகரத்து ஆனவர்.

இவர்கள் கடந்த 2006–ம் ஆண்டு முதல் ஒரே குடும்பமாக குழந்தைகளுடன் வசித்தார்கள். அதிபராக ஹோலண்டே பதவி ஏற்ற பிறகு அவருடன் வலேரியும் ஜனாதிபதி மாளிகையில் துணைவியார் (முதன்மை பெண்) என்ற அந்தஸ்துடன் வலம் வந்தார். இந்நிலையில், நடிகையுடன் கள்ளக்காதல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததால் பிரான்சு அதிபர் ஹோலண்டே தனது துணைவியை பிரிந்தார். இதன் மூலம் 2 வாரம் நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

இந்நிலையில் இன்று வலேரி டிரேயர்வெல்லர் இரண்டு நாள் பயணமாக அதிகாலை இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய வலேரி செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர் இந்தியா வந்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி