செய்திகள்,திரையுலகம் பாத்ரூமில் தவறி விழுந்த நடிகை…

பாத்ரூமில் தவறி விழுந்த நடிகை…

பாத்ரூமில் தவறி விழுந்த நடிகை… post thumbnail image
பெங்களூர்:-புன்னகை, பாமா விஜயம், இருகோடுகள் உள்பட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி (68). இவர் பெங்களூரில் வசித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பில் லேசான பிளவு ஏற்பட்டது. பாத்ரூமில் இருந்த கூரான ஒரு பொருள் அவரது இடுப்பு எலும்பில் குத்தியதில் காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவரை சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதுபற்றி ஜெயந்தி மகன் கிருஷ்ணகுமார் கூறும்போது, அம்மாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி