செய்திகள்,திரையுலகம் மீண்டும் இணையும் ‘உதயநிதி-நயன்தாரா’ஜோடி…

மீண்டும் இணையும் ‘உதயநிதி-நயன்தாரா’ஜோடி…

மீண்டும் இணையும் ‘உதயநிதி-நயன்தாரா’ஜோடி… post thumbnail image
சென்னை:-எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளிவர உள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ சார்பில் தயாரித்து வரும் உதயநிதி ஸ்டாலின், இப்படத்திற்கு பிறகு ‘நண்பேன்டா’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தை உதயநிதி நடிப்பில் வெளிவந்து ஹிட்டான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை இயக்கிய எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ.ஜெகதீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இப்படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளனர். ஏற்கெனவே இப்படத்தில் காஜல் அகர்வால்தான் கதாநாயகியாக நடிக்க தேர்வாகியிருந்தார். தற்போது அந்த இடத்திற்கு நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இப்படத்தில் உதயநிதியுடன் முக்கிய வேடத்தில் சந்தானமும் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் வேலைகள் நாளை முதல் தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி