செய்திகள்,திரையுலகம் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’கஜினியின் இரண்டாம் பாகம்?…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’கஜினியின் இரண்டாம் பாகம்?…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’கஜினியின் இரண்டாம் பாகம்?… post thumbnail image
மும்பை:-சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் கஜினி. இந்த படத்திற்கு பின்னர்தான் அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கோலிவுட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா படம், கஜினியின் இரண்டாம் பாகம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனர் லிங்குசாமியின் சகோதரருமாகிய என்.சுபாஷ் சந்திரபோஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் செய்தியாளரிடம் கூறியபோது, சூர்யாவுக்கு கஜினிக்கு பின்னர் பெரும் திருப்பத்தை கொடுக்கும் படமாக அஞ்சான் இருக்கும் என்றுதான் நான் கூறியுள்ளேன். ஆனால் அஞ்சான் படம் கஜினியின் இரண்டாம் பாகம் என்று வரும் செய்திகள் ஆதாரமில்லாதது. அந்த கதைக்கும் இதற்கும் சிறிதும் சம்மந்தம் இல்லை. மேலும் இந்த படத்தின் மூலம் சூர்யாவும், லிங்குசாமியும் தங்கள் அடுத்த நிலையை அடைவார்கள். அந்த அளவுக்கு படம் சூப்பராக உருவாகிக்கொண்டிருக்கிறது.

முதல்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தாவுக்கு கோலிவுட்டில் முன்னணி நாயகியாக மாறும் வாய்ப்பு இந்த பட ரிலீஸுக்கு பின் கிடைக்கும். பெரும் பொருட்செலவில் முழுக்க முழுக்க மும்பையில் செட் அமைத்து இந்த படம் உருவாகி வருவதாக மேலும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை யூடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி