செய்திகள் பிளஸ் 1 மாணவியுடன் ஓடிய பள்ளி ஆசிரியர்…

பிளஸ் 1 மாணவியுடன் ஓடிய பள்ளி ஆசிரியர்…

பிளஸ் 1 மாணவியுடன்  ஓடிய பள்ளி ஆசிரியர்… post thumbnail image
ஆத்தூர் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மூலப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ரமேஷ் (34), ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவியும், அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கொண்டையம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ரமேஷிடம் டியூசன் படித்து வந்தார். அந்த மாணவிக்கும், ரமேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து மாணவியின் தந்தை சரவணன், தனது மகளை ரமேஷ், கடத்திச் சென்றதாக தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இதே பள்ளியில் பணிபுரிந்த மற்றொரு ஆசிரியர், வேறொருவரின் மனைவியுடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று காலை பள்ளி முன்பு, தம்மம்பட்டி – கெங்கவல்லி சாலையில் மாணவ- மாணவியர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், போலீசார், நடத்திய பேச்சுவார்த்தையில், இந்த பள்ளிக்கு பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். மாணவியை கடத்திய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி