செய்திகள்,திரையுலகம் சரண்டரானார் நடிகை சமந்தா…

சரண்டரானார் நடிகை சமந்தா…

சரண்டரானார் நடிகை சமந்தா… post thumbnail image
ஐதராபாத்:-மகேஷ்பாபு தெலுங்கில் நடித்திருக்கும் படம் 1 – நேனொக்கடய்னே. இப்படத்தில் ஹீரோவின் பின்னால் நாய்போல் மண்டியிட்டு ஹீரோயின் செல்வதுபோன்ற போஸ்டர் ஒட்டப்பட்டதுக்கு சமந்தா கண்டனம் தெரிவித்தார். அவருக்கு காதலன் சித்தார்த் வக்காலத்து வாங்கினார். இதையடுத்து மகேஷ்பாபு, சமந்தா ரசிகர்களுக்கு இடையே பேஸ்புக்கில் மோதல் வெடித்தது.

இந்நிலையில் மகேஷ்பாபு சமீபத்தில் சமந்தாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், குறிப்பிட்ட விஷயம் பற்றி சமந்தா என்னிடம் நேரடியாகவே பேசி இருக்கலாம்.அவர் வெளியிட்ட கருத்து எனக்கு வருத்தம் அளித்தது என்றார். பட இயக்குனர் சுகுமாரும் சமந்தா மீதான தன்னுடைய கோபத்தை நண்பர்களிடம் வெளிப்படுத்தினார். இந்நிலையில் இயக்குனரிடம் சமந்தா சரண் அடைந்திருக்கிறார். ஆட்டோ நகர் சூர்யா என்ற படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த சமந்தா 1 நெனொக்கடய்னே பட இயக்குனர் சுகுமார் அருகில் அமர்ந்தார்.

இருவரும் கிசுகிசுவென பேசிக்கொண்டதுடன் சமந்தாவிடம் ஜோக் அடித்து சிரித்து பேசினார் இயக்குனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் ஒருவரிடம் ஒருவர் சரண்டர் ஆகிவிட்டனர் என்று முணுமுணுத்தனர். சுகுமாரின் அடுத்த படத்தில் வாய்ப்பு பெறவே சமந்தா இப்படி நடந்துகொண்டிருக்கலாம் என்றும் சிலர் பேசிக்கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி