செய்திகள் விரைவில் மன்னர் ஆகும் இளவரசர் சார்லஸ்- ராணிஎலிசபெத் முடிவு…

விரைவில் மன்னர் ஆகும் இளவரசர் சார்லஸ்- ராணிஎலிசபெத் முடிவு…

விரைவில் மன்னர் ஆகும் இளவரசர் சார்லஸ்- ராணிஎலிசபெத் முடிவு… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (65). இவர் பட்டத்து இளவரசர் ஆவார். ராணி எலிசபெத்துக்கு பிறகு இவர் மன்னர் ஆக வேண்டும்.

ஆனால் 87 வயது ஆகியும் ராணி எலிசபெத் அவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. தனது மகன் சார்லசை மன்னர் ஆக்காமல் அப்பொறுப்பை பேரன் வில்லியமிடம் ஒப்படைக்க அவர் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.அதை பொய்யாக்கும் வகையில் இளவரசர் சார்லஸ் விரைவில் மன்னர் ஆக முடிசூடப்பட உள்ளார். அதற்கு முன்னோடியாக ராணிஎலிசபெத் தனது பணிகளை மகன் சார்லசுடன் இணைந்து செய்ய முடிவெடுத்துள்ளார்.இதற்கு முன்பு இவர்கள் இருவரும் தனித்தனியாக தங்களை பணிகளை ஆற்றி வந்தனர். தற்போது இருவரும் சேர்ந்து பணியாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக ராணிஎலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் ஆகியோரின் தகவல் தொடர்பாளர் அலுவலகங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகம் பக்கிங்காம் அரண்மனையில் செயல்படும்.இதை இளவரசர் சார்லசின் செய்தி தொடர்பாளர் நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிஎலிசபெத்துக்கு வருகிற ஏப்ரலில் 88–வது வயது பிறக்கிறது.

மேலும் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார். எனவே தனது பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி