செய்திகள் நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி…

நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி…

நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி… post thumbnail image
திருப்பூர்:-திருப்பூர் ஊத்துகுளி ரோடு பாறைபாளையத்தை சேர்ந்தவர் திவ்யதர்ஷினி (வயது 16 பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் திவ்யதர்ஷினி வீட்டில் இருந்தார். மாலை நேரத்தில் பொதுக் குழாயில் குடிதண்ணீர் வந்தது.

இதையடுத்து திவ்யதர்ஷினி குடத்துடன் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தார். அப்போது அந்த வழியாக மண்ணறையை சேர்ந்த வாலிபர் தங்கவேல் குடிபோதையில் தள்ளாடியபடி வந்தார்.நடுரோட்டில் திவ்யதர்ஷினியை பார்த்ததும் தங்கவேலுவுக்கு காமவெறி ஏற்பட்டது.
திவ்யதர்ஷினி அருகில் வந்த தங்கவேல் திடீரென அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் அவரை மானபங்கம் செய்ய முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்கவேலுவிடம் இருந்து திவ்ய தர்ஷினியை மீட்டனர். போதையில் இருந்த தங்கவேலுவுக்கு தர்மஅடி கொடுத்தனர்.

தகவலறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தாமஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கவேலுவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி