செய்திகள் ‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…

‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…

‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி… post thumbnail image
ஆலந்தூர்:-ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரதி (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் டி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு பஸ் மூலம் சென்று வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் கவுதம் (19). இவர் ரதி பள்ளிக்கு செல்லும்போதும், வரும் போதும் பின்னால் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும் படி கடந்த 6 மாதமாக தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் ரதி காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம் நேற்று மாலையில் ரதியின் வீட்டின் அருகே வந்தார். அப்போது ரதி கடைக்கு செல்வதற்காக வீட்டை வீட்டு வெளியே வந்தார். உடனே கவுதம் ரதியின் அருகே சென்று தன்னை காதலிக்கும் படி மிரட்டினார்.

இதனால் ரதி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி வந்தனர். உடனே கவுதம் அங்கிருந்து ஓடி விட்டார்.இது குறித்து ரதி ஆதம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதமனை கைது செய்தனார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி