அரசியல்,செய்திகள் சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…

சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…

சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் சசிதரூர் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்தார். இதனால் அவருக்கு அதிகாலை 3 மணி அளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருதய படபடப்பு இருந்தது.

உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய கோளாறு சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இ.சி.ஜி. எடுத்து பார்க்கப்பட்டது.தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி