அரசியல்,செய்திகள் இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்-வைகோ…

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்-வைகோ…

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்-வைகோ… post thumbnail image
மதுரை:-வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் மதுரை வில்லாபுரத்தில் உள்ள ஜெயஜோதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நாட்டிய நாடக தொடக்க விழாவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ஜோதிமுத்துராமலிங்கம், பிஸ்மில்லாகான், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பூமிநாதன் வரவேற்றார்.

வீரத்தாய் வேலுநாச்சியார் வெள்ளையர்களை விரட்டி அடித்து சிவகங்கை சீமையை மீட்பது போன்று அந்த நாடகம் உருவாக்கப்பட்டு இருந்தது.நாடகம் முடிந்த பின்பு வைகோ பேசினார். அவர் கூறியதாவது:-இந்த நாடகம் அமெரிக்காவில் 5 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. அங்கு, இந்த நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரமங்கை வேலுநாச்சியாருக்கு, ஹைதர் அலி 8 பீரங்கிகள் மற்றும் குதிரைகள் வழங்கி உதவினார். இது, மத, இன ஒற்றுமைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

இந்த நாடகமும் மத, இன ஒற்றுமையை ஏற்படுத்தும். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் சிவாஜி கணேசனுக்கு பெரும் புகழை ஏற்படுத்திக்கொடுத்தது. இந்த நாடகமும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் படமாகும். இந்த நாடகமும் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கையில் சிங்களர்களை விரட்டி அடித்து தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர்.சரவணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் கீரைத்துறை பாண்டி, மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க அவைத்தலைவர் சின்னசெல்லம், கொள்கை விளக்க செயலாளர் அழகு சுந்தரம், மகபூப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி