செய்திகள் மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…

மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…

மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. அத்துடன், அவரது பக்கத்திற்குள் ஊடுருவிய யாரோ மர்ம நபர், அதில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த கட்டுரையாளர் மெகர் தராருக்கு வினோதமான காதல் செய்திகளை அனுப்பியிருக்கிறார்.

இந்த காதல் வாசகங்களால் சசி தரூர் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். இந்த வாசங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மெகர் தரார், சசி தரூரின் கணக்கை யாரோ ஹேக் செய்திருப்பதாக தெரிவித்தார்.பின்னர் இதுபற்றி விளக்கம் அளித்த சசி தரூர், தற்காலிகமாக தனது டுவிட்டர் கணக்கை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

இதேபோன்று சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் டுவிட்டர் கணக்கும் சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டு, சுப்பிரமணிய சாமியை விமர்சனம் செய்து தகவல் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி