அரசியல்,செய்திகள் சாராய விற்பனைக்கு தடை…

சாராய விற்பனைக்கு தடை…

சாராய விற்பனைக்கு தடை… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடகத்தில் சாராயம் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்–மந்திரி சித்தராமையா, சாராயத்துக்கு தடை விதித்தது தவறான முடிவு என்று தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்–மந்திரி சித்தராமையாவிடம், சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–
மாநிலத்தில் சாராய விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை ஒருபோதும் வாபஸ் பெறப்படாது. சாராய விற்பனையை மீண்டும் தொடங்கும் திட்டமும் அரசிடம் இல்லை. மதுஒழிப்பை முழுமையாக அமல்படுத்துவது என்பது இயலாத காரியம்.சாராயத்துக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு ஏழை மக்கள், மதுபானத்துக்கு அதிக பணம் செலவு செய்கிறார்கள் என்பதால், சாராயத்துக்கு தடை விதித்தது தவறான முடிவு என்று நான் கூறினேன். அதற்காக நான் மீண்டும் சாராய விற்பனைக்கு அனுமதி அளிக்கப் போவதாக கூறுவது சரியல்ல.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்து உள்ளது. எனவே மாநிலத்தில் முழுமையாக மதுஒழிப்பை அமல்படுத்த வாய்ப்பு இல்லை. அதனால் எந்தவொரு பயனும் இல்லை.இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி