செய்திகள் காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…

காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…

காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்… post thumbnail image
ஆனைமலை:-ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிசங்கர் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

தனது காதலை அங்காள பரமேஸ்வரிடம் பலமுறை சொன்னார். ஆனால் அங்காள பரமேஸ்வரி மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் தினமும் காலையும், மாலையும் அங்காள பரமேஸ்வரி வேலைக்கு செல்லும்போது ஹரி பின் தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார்.இதுகுறித்து அங்காள பரமேஸ்வரி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். இதைகேட்டு கோபமடைந்த கருப்பசாமி தனது மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த ஹரி சங்கரை கண்டித்தார். என் மகளுக்கு இனிமேல் தொல்லை செய்தால் நடப்பதே வேறு என்று எச்சரித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிசங்கர் அங்காள பரமேஸ்வரியை அடைய நினைத்தார். இதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். நேற்று இரவு அங்காள பரமேஸ்வரி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்றார்.அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ஹரிசங்கர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அங்காள பரமேஸ்வரின் வாயை பொத்தி அருகிலுள்ள காட்டுக்குள் கடத்தி சென்றார். அங்கு வலுக்கட்டாயமாக அங்காள பரமேஸ்வரியை கற்பழித்தார்.ஹரிசங்கரின் பிடியில் இருந்து தப்பிக்க அங்காள பரமேஸ்வரி கடுமையாக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

நீண்ட நேரமாகியும் வெளியில் சென்ற மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கருப்பசாமி தனது உறவினர்களுடன் மகளை தேடி அந்த பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு ஹரிசங்கரின் பிடியிலிருந்த அங்காள பரமேஸ்வரி கதறி அழுத சத்தம் கேட்டது.பதறியடித்த கருப்பசாமி சத்தம் போட்டபடியே அங்கு வந்தார். கருப்பசாமியும் அவரது உறவினர்களும் அங்கு வருவதை பார்த்த ஹரிசங்கர் அங்கிருந்து தப்பியோடினார். மகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு கருப்பசாமி பதறினார்.

மகளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பசாமி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஹரிசங்கரை காட்டுப்பகுதியில் தேடினர்.இன்று காலை சிங்கா நல்லூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ஹரிசங்கர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரிசங்கர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி