செய்திகள்,திரையுலகம் தமிழ் சினிமாவின் முதல் ‘லெஸ்பியன்’ திரைப்படம்…

தமிழ் சினிமாவின் முதல் ‘லெஸ்பியன்’ திரைப்படம்…

தமிழ் சினிமாவின் முதல் ‘லெஸ்பியன்’ திரைப்படம்… post thumbnail image
சென்னை:-சில ஆண்டுகளுக்கு முன்பு ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ் இணைந்து நடித்திருந்த பயர் என்ற இந்திப் படம் இரண்டு பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவை மையமாக கொண்டு வெளிவந்தது.

அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது. அப்போது ஷபனா ஆஸ்மி எம்.பியாக இருந்ததால் பாராளுமன்றம் வரை பிரச்னை சென்றது.இப்போது அதே போன்ற லெஸ்பியன் கதை ஒன்று தமிழில் படமாகி வருகிறது. படத்தின் டைட்டில் உன் பேர் சொல்ல ஆசை. ஷாலினி, சிவகாமி என்ற இரண்டு பேர் லெஸ்பியன் கேரக்டரில் நடிக்கிறார்கள். தினேஷ் கேமரா மேனாகவும், சிபு.சுகுமாரன் மியூசிக் டைரக்டராகவும் பணியாற்றுகிறார்கள். மஜீடி என்பவர் டைரக்ட் செய்கிறார்.

சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்து வளரும் இரண்டு பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த நட்பை விடாமல் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் ஒரு ஆண் வந்தால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்களே ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்கிற கதையாம். சென்னை, கோவா, கேரளா பகுதியில் ஷுட்டிங் நடத்தியிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி