அரசியல்,செய்திகள் நடிகையுடன் தொடர்பு வைத்துள்ள அதிபர்…

நடிகையுடன் தொடர்பு வைத்துள்ள அதிபர்…

நடிகையுடன் தொடர்பு வைத்துள்ள அதிபர்… post thumbnail image
பாரீஸ்:-பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்காய் ஹோலந்து (59).இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் ஆனவர்.4 குழந்தைகள் உள்ளனர்.

இவர் தற்போது பத்திரிகையாளர் வாலெரி ட்ரீயர் வெய்லருடன் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், அதிபர் ஹோலாந்துக்கு பிரான்சின் பிரபல நடிகை ஜுலி கெய்ட் என்பவருடன் தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.அதிபருக்கு இவருடன் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இதை உறுதி செய்யும் வகையில் பிரான்சில் இருந்து வெளிவரும் க்ளோசர் என்ற வார பத்திரிகை 7 பக்கத்துக்கு படத்துடன் சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது.
பாரீஸ் நகரில் இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்று பல முறை ஜுலியை இவர் சந்தித்துள்ளார். புத்தாண்டு பிறக்கும் இரவில் ஜுலியை தேடி சென்று சந்தித்து இருக்கும் செய்தி போட்டோக்களுடன் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படங்கள் தெளிவாக இல்லை.

கடந்த 2012–ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஹோலாந்துக்கு நடிகை ஜுலி கெயட் அறிமுகம் ஆனார். அதில் இருந்து அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. நடிகை ஜுலி கெய்ட் 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.இவர் 50–க்கும் மேற்பட்ட சினிமா படங்கள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளில் நடித் துள்ளார். இதற்கிடையே, இச்செய்தியை வெளியிட்ட க்ளோசர் பத்திரிகை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க போவதாக அதிபர் ஹோலந்து அறிவித்துள்ளார்.
இதை எனது தனிப்பட்ட வாழ்க்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதுகிறேன். நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் உள்ளது போல எனக்கும் அந்தரங்க வாழ்க்கைக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி