செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 7 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ அனுமதி மறுப்பு…

7 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ அனுமதி மறுப்பு…

7 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ அனுமதி மறுப்பு… post thumbnail image
புதுடெல்லி:-7 ஓவர்களை கொண்ட ‘செவன் ஸ்டார் லீக்’ போட்டி தொடர் துபாயில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சை (யூ.ஏ.இ) சேர்ந்த அபுதாபி, ஷார்ஜா, துபாய், அஜ்மான், ராஸ்–அல்–கெய்மான், உம்– அல்–குய்வான், புஜைரா ஆகிய 7 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள்.இந்தப்போட்டிக்கான விளம்பர தூதரக இந்திய அணி கேப்டன் டோனி நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும்,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்,அனுமதி அளித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப்போட்டிக்கு அனுமதி அளித்ததாக வெளியான தகவலை பி.சி.சி.ஐ மறுத்துள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–ஐக்கிய அரபு எமிரேட்டில் 7 ஓவர் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி இணைந்து நடத்துவதாக வெளியான தகவல் உண்மையில்லை.ஐ.சி.சி.யும் ஐக்கிய அரபு எமிரேட் கிரிக்கெட் போர்டும் இந்தப்போட்டிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று எங்களிடம் தெளிவுப்படுத்தி விட்டன. இந்தப்போட்டிக்கு யாரும் அங்கீகாரம் கொடுக்கவில்லை. என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி