செய்திகள் வெளிநாட்டில் வேலை செய்ய தடை!…

வெளிநாட்டில் வேலை செய்ய தடை!…

வெளிநாட்டில்  வேலை செய்ய தடை!… post thumbnail image

மலேசியா நாட்டு உணவகங்கள் கட்டுமானப் பணிகள் குப்பைகளை நீக்குதல் மற்றும் தோட்டப்பணிகள் போன்ற வேலைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள் பார்த்து வந்தன.தற்போது, இத்தகைய வேலைகளை செய்வதில் அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர் .

இந்தியா, இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் இத்தகைய தொழில்களை இந்நாட்டில் மேற்கொள்ளுகின்றனர். குறிப்பாக இங்குள்ள பெரும்பான்மையான உணவகங்களில் இந்தியர்களே சமையல்காரர்களாகவும், பணியாளர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர்.

மலேசியாவின் துணைப் பிரதமர் முஹ்யுதின் யாசின் தலைமையில் இந்த கேபினெட் கமிட்டியின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மலேசிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் துரித உணவகங்களில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் இத்தகைய உணவகங்களில் வேலை செய்வதில் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளதுதான் அரசின் இந்த முடிவுக்குக் காரணம் ஆகும்.

மலேசிய அரசின் இந்த முடிவினை உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவினால் ஏராளமான இந்தியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்ப்பட இருக்கிறது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி