செய்திகள் “இ.கியூ”. ரயில் டிக்கெட் கள்ளத்தனமாக விற்பனை!…

“இ.கியூ”. ரயில் டிக்கெட் கள்ளத்தனமாக விற்பனை!…

“இ.கியூ”. ரயில் டிக்கெட் கள்ளத்தனமாக விற்பனை!… post thumbnail image
அவசர கால ஒதுக்கீடு உள்ள ரயில் டிக்கெட்டுகளை மோசடியாக விற்பனை சி.பி.ஐ. விசாரித்து வருகின்றன.ரயில்வேயில் ‘இ.கியூ.’ என்ற பெயரில் அவசர கால பயணத்துக்காக ரயில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதை வி.ஐ.பி. இட ஒதுக்கீடு,என்றும் தலைமையிட இட ஒதுக்கீடு என்றும் கூறுவது வழக்கம். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து சராசரியாக ஒரு நாளுக்கு 35 ஆயிரம் டிக்கெட்டுகள் இந்த இ.கியூ. ஒதுக்கீட்டின்கீழ் வழங்கப்படுகின்றன.

இந்த ஒதுக்கீட்டில் டிக்கெட் பெறுவதற்கு “எம்.பி.க்கள்”, ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்கள் பரிந்துரை கடிதங்கள் வழங்குவது உண்டு. இதில் ரயில்வே தொழிற்சங்கங்களில் உள்ள சில சுயநலவாதிகள், தனியார் பயண நிறுவனங்களுடன் கூட்டுச்சதி செய்து அவசரகால ஒதுக்கீடு டிக்கெட்டுகளை வணிக ரீதியில் பயன்படுத்தி கோடிக்கணக்கில் கொள்ளை லாபம் சம்பாதித்தது அம்பலத்துக்கு வந்தது அதிலும் எம்.பி.க்களின் கையெழுத்துக்களை போலியாக போட்டும், போலியான கடித முகப்பில் சிபாரிசு கடிதங்கள் எழுதியும் கள்ளத்தனமாக இ.கியூ. ரயில் டிக்கெட் ஒதுக்கீடுகள் பெறப்பட்டுள்ளன.

இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. முதல் நிலை விசாரணை அறிக்கை பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது. சி.பி.ஐ. வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில், முழு அளவில் திட்டமிட்டு இந்த அவசர கால டிக்கெட் ஒதுக்கீடு ஊழல் நடந்துள்ளது.

இதில் தொடர்புடைய பயண நிறுவன ஏஜெண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளும் சிக்கி உள்ளனர். முதலில் டெல்லியை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தப்படும். தேவை ஏற்பட்டால் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்”என்று கூறினார்.

சி.பி.ஐ. நடத்திய சோதனைகளில் ரயில் டிக்கெட் மோசடி தொடர்பான சில ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி