செய்திகள் அழுத ஒரு வயது குழந்தைக்கு விழுந்தது பளார்…

அழுத ஒரு வயது குழந்தைக்கு விழுந்தது பளார்…

அழுத ஒரு  வயது  குழந்தைக்கு விழுந்தது பளார்… post thumbnail image
அட்லாண்டா:-அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் இருந்து அட்லாண்டா நகருக்கு ஜெசிகா பென்னட் என்ற பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். இவருக்கு அருகே ஜோ ரிக்கி ஹண்ட்லி என்பவர் பயணம் செய்தார்.

ஜெசிகாவின் குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்தது. சமாதானப்படுத்த முடியாமல் ஜெசிகா திணறினார். இந்நிலையில் குழந்தை அழுவதை கண்டு ஜோ ரிக்கி எரிச்சல் அடைந்தார். குழந்தையை சமாதானப்படுத்தும்படி ஜெசிகாவிடம் சண்டையிட்டார். குழந்தை தொடர்ந்து அழவே கோபமடைந்த ஜோ ரிக்கி, ஒன்றரை வயது குழந்தையின் கன்னத்தில் திடீரென பளார் என அறைந்தார். அதனால் ஜெசிகாவும் மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அட்லாண்டா விமான நிலையத்தில் ஜெசிகா கொடுத்த புகாரின் பேரில் ஜோ ரிக்கியை போலீசார் கைது செய்தனர்.

இதில் குழந்தையின் இடது கண்ணின் கீழே லேசான காயம் ஏற்பட்டதை போலீசார் பின்பு விசாரணையின் போது உறுதி செய்தனர். நீதிமன்ற விசாரணையில் ஜோ ரிக்கி குழந்தையை அறைந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தனது நடத்தைக்காக ஜெசிகாவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.எனினும் அவரது குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு அமெரிக்க நீதிமன்றம் 8 மாதம் சிறை தண்டனை விதித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி