செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மருத்துவமனையில் திடீர் அனுமதி “ஸ்ருதி”!!!

மருத்துவமனையில் திடீர் அனுமதி “ஸ்ருதி”!!!

மருத்துவமனையில்  திடீர் அனுமதி  “ஸ்ருதி”!!! post thumbnail image
நடிகை “ஸ்ருதிஹாசன்” உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

“ஸ்ருதிஹாசன்” இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஸ்ருதியின் மீது மும்பையில் தாக்குதல் நடந்தது. மர்ம மனிதர் “ஸ்ருதியின்” வீட்டுக்குள்அத்துமீறி நுழைந்து ஸ்ருதிஹாசனை தாக்கினார். பின்னர் அவனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.

“ஸ்ருதிஹாசன்” தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். மேலும், ஸ்ருதி “ரேஸ்குராம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நடித்துள்ள இன்னொரு படமான “ஏவடு” ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

“ஸ்ருதிஹாசன்” படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்ருதி “வயிற்று வலியால்” அவதிப்பட்டார். உடனடியாக அவரை ஐதராபாத் “ஜுப்ளி ஹில்ஸ்” பகுதியில் உள்ள தனியார் “ஆஸ்பத்திரியில்” சிகிச்சைக்காக அனுமதித்தன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்புகள் “ரத்து” செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி