செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சென்னை ஓபன் : வாவ்ரிங்கா சாம்பியன்…

சென்னை ஓபன் : வாவ்ரிங்கா சாம்பியன்…

சென்னை ஓபன் : வாவ்ரிங்கா சாம்பியன்… post thumbnail image
சென்னை:-ஏர்செல்– சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)– 7–ம் நிலை வீரரான ரோஜர் வாஸ்லின் (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

இருவரும் சம பலம் பொருந்தியவர்கள் என்பதால் இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது.முதல் செட்டில் வாவ்ரிங்காவுக்கு ரோஜர் வாஸ்லின் கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் வாவ்ரிங்கா 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார்.முதல் செட்டில் ஈடுகொடுத்த அளவிற்கு 2-வது செட்டில் ரோஜர் வாஸ்லினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் வாவ்ரிங்கா 2-வது செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றி 2-0 என்று நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.இதுவரை மூன்று முறை பைனலுக்கு முன்னேறிய வாவ்ரின்கா, 2011ல் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2010ல் இரண்டாவது இடம் பிடித்தார்.

45 லட்சம் பரிசு:-கோப்பை வென்ற வாவ்ரின்காவுக்கு, சாம்பியன் பட்டத்துடன், ரூ. 45 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 250 ரேட்டிங் புள்ளிகள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பிடித்த ரோஜர் வாசலினுக்கு கோப்பையுடன், ரூ. 23 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 150 ரேட்டிங் புள்ளிகள் வழங்கப்பட்டன.
வெற்றி குறித்து வாவ்ரின்கா கூறுகையில், ‘‘சென்னை ஓபனில் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது மகிழ்ச்சி. தவிர இது, எனது 5வது பட்டம். முழுத்திறமையை வௌிப்படுத்தியதால், இம்முறை சாதிக்க முடிந்தது. கடந்த ஆண்டு ‘டாப்–10’ வரிசையில் உள்ள வீரர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினேன். இந்த வெற்றி, அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் சாதிக்க உதவும் என நம்புகிறேன். மீண்டும் சென்னை ஓபனில் விளையாடுவேன்,’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி