செய்திகள்,முதன்மை செய்திகள் மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் …

மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் …

மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் … post thumbnail image
தேனி:-சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் செந்திலன். இவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த வாசகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்பு இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால், வாசகர் செந்திலனிடம் கோபித்து கொண்டு தம் தாய் வீட்டில் போய் தங்கியுள்ளார். தம் வீட்டுக்கு செந்திலன் வரக்கூடாது என வாசகரின் தாய்த் தடை செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தம்முடைய மனைவியை பார்க்க செந்திலன் வந்துள்ளார். அப்போது செந்திலனுக்கும் அவர் மாமியார் சித்ராவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செந்திலன் தம் மாமியார் சித்ராவின் காதை கடித்து துப்பியுள்ளார்.படுகாயம் அடைந்த சித்ரா தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து சின்னமனூர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செந்திலனைத் தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி