செய்திகள்,முதன்மை செய்திகள் எல்லையில் ஹெராயின் கடத்தி வந்த 2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை…

எல்லையில் ஹெராயின் கடத்தி வந்த 2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை…

எல்லையில் ஹெராயின் கடத்தி வந்த 2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை… post thumbnail image
அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநில எல்லைக்கோட்டுப் பகுதியில் கடுமையான பனி பெய்தது. பனி மூட்டத்தையும், இருளையும் சாதகமாக்கிக் கொண்டு பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதனை கண்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சரண் அடைந்து விடும்படி அவர்களை எச்சரித்தனர்.இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத 3 பேரும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இந்திய வீரர்களும் பதிலுக்கு எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் 2 பாகிஸ்தானியர்கள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவன் மட்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடி உயிர் பிழைத்தான்.

செத்துக் கிடந்த 2 பாகிஸ்தானியர்கள் கொண்டு வந்த பைகளில் 4 கிலோ ஹெராயின், தானியங்கி துப்பாக்கி, தோட்டாக்கள், பாகிஸ்தான் சிம் கார்ட் ஆகியவை கிடந்தன. அவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி