செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் “காதலி”யை கைப்பிடிப்பாரா சிம்பு!!!

“காதலி”யை கைப்பிடிப்பாரா சிம்பு!!!

“காதலி”யை கைப்பிடிப்பாரா சிம்பு!!! post thumbnail image
“காதல்” வந்தாலே எந்த நேரமும் தங்களது ஜோடியைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது சிம்புவின் வழக்கம்.

அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும் பின்னாடியே தானும் பறந்து விடுவார். அப்படிப்பட்ட சிம்பு இப்போது இரண்டாம் கட்டமாக ஹன்சிகா மீது காதல்கொண்டுயுள்ளார். இந்தமுறையும் அவரது காதல் ரொம்ப உறுதியாக இருகிறாதாம்.

அதனால் முதல் காதலுக்கு எந்த குறைவும் இல்லாமல் இந்த முறையும் ஹன்சிகாவை ஒரு நாளைக்கு ஒரு தடவை பார்க்கா விட்டாலும் துடித்துப்போகிறார் சிம்பு.

அவரது காதலின் வேகத்தை புரிந்து கொள்ளாத “ஹன்சிகாவோ” அடிக்கடி அவருக்கு “டேக்கா” கொடுத்து வருகிறாராம். உள்ளூரில் படப்படிப்பில் இருக்கும்போதும் அவர் ஸ்பாட்டுக்கு வந்து தொந்தரவு செய்வார் என்று “போனையே” சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். அதேபோல் அவுட்டோர் செல்லும்போது சொல்லாமல் கொள்ளாமல் “எஸ்கேப்பாகி” விடுகிறார் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி