செய்திகள்,முதன்மை செய்திகள் நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது…

நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது…

நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது… post thumbnail image
நேபாளத்தின் கா்வ்ரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார் கேசி. இவர் தனது நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இது தீவிரமாகி இப்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு வந்து விட்டார்.

இது பற்றி போலீஸாரிடம் குமார் கூறுகையில், நானும், எனது நண்பரும் லாரி டிரைவர்களாக உள்ளோம். சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் நண்பரின் மனைவியும், நானும் நெருக்கமாக பழகத் தொடங்கினோம். அடிக்கடி ஏதாவது காரணத்தைச் சொல்லி அவர் வந்து விடுவார். இருவரும் சந்தோஷமாக இருப்போம். என்னிடம் தனது போட்டோவைக் கொடுத்து பச்சை குத்திக் கொள்ளுமாறு எனது காதலி கூறினார். இதையடுத்து நான் பச்சை குத்திக் கொண்டேன். நான் பச்சை குத்திக் கொண்டதை எனது நண்பர் ஒருவரிடம் காட்டினேன். அவர் மூலம் இது பரவி விட்டது என்றார் குமார்.

தனது மனைவியின் படத்தை குமார் தனது நெஞ்சில் பச்சை குத்தியிருப்பதை அறிந்த அப்பெண்ணின் கணவர், கோபமடைந்து தனது மனைவியிடம் உங்களுக்குள் என்ன உள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று அடம் பிடித்துள்ளார். இது சரிப்பட்டு வராது என்று முடிவு செய்த பெண்ணின் கணவர் போலீஸில் புகார் கொடுத்து விட்டார். போலீஸார் விசாரணை நடத்தி குமாரைக் கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி