செய்திகள்,முதன்மை செய்திகள் ஜப்பானில் பூகம்பம்…அதிர்ந்தன கட்டிடங்கள்…

ஜப்பானில் பூகம்பம்…அதிர்ந்தன கட்டிடங்கள்…

ஜப்பானில் பூகம்பம்…அதிர்ந்தன கட்டிடங்கள்… post thumbnail image
ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 10.03 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகள் தோன்றின. தலைநகர் டோக்கியோவிலிருந்து 160 கி.மீ வடகிழக்கேயும், செயல்படாது இருக்கும் புகுஷிமா அணுஉலையிலிருந்து 80 கி.மீ தென்மேற்கேயும் உள்ள இபராகி எல்லையில் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ ஆழம் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து எட்டு நிமிடங்கள் கழித்து 3.6 ரிக்டர் அளவிலான அதிர்வு ஒன்றும் அதே பகுதியில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தோன்றிய நிலநடுக்கத்தின் தாக்கத்தில் தலைநகர் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டிடங்கள் குலுங்கின.

ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புகுஷிமா அணுஉலையிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புகுஷிமா அணுஉலையிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலைகளாலும், பூகம்பத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த அணுஉலை செயல்படாத நிலையை எட்டியுள்ளது.

இருப்பினும் இதன் உலைக்கூடங்களில் இருந்து தொடர்ந்து வெளியேறும் கதிரியக்கம் அவற்றைக் குளிர்விக்க சேமிக்கப்பட்டுள்ள நீர்த் தொட்டிகளில் கலந்து வெளியேறுகின்றது. இதனைத் தடுக்கும் முயற்சியில் விடுமுறைக் காலத்திலும் விஞ்ஞானிகள் அயராது பணி புரிந்து வருகின்றனர்.

மேற்கொண்டு ஏற்படும் பூகம்பத் தாக்குதல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளதால் இங்குள்ள நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய பூகம்பத்தினால் புகுஷிமா அணு ஆலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி