செய்திகள்,முதன்மை செய்திகள் சீரியல் பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் …

சீரியல் பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் …

சீரியல் பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் … post thumbnail image
நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 26). இவருடைய மனைவி சீதா (21). நேற்று இரவு வீட்டில் சீதா டி.வி. சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை சீதாவின் கணவர் அருள் முருகன் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சீதா கணவன் வெளியே சென்றிருந்த நேரத்தில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீபரவியதால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருள்முருகன் சீதா தம்பதியினருக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி