செய்திகள்,முதன்மை செய்திகள் குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய்…

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய்…

குழந்தையை  விற்பனை செய்ய முயற்சித்த தாய்… post thumbnail image
இங்கிலாந்தில் உள்ள பிராட் போர்டு நகரை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் இணையதளத்தில் விற்பனைக்கு குழந்தை தயார் என்ற தலைப்பில் விளம்பரம் செய்திருந்தார்.

அதில் தான் பெற்ற 4 மாத ஆண் குழந்தையை 1 கோடி 50 லட்சம் ரூபாய்க்கு விற்க தயாராக இருக்கிறேன். வாங்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம் என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இணைய தளத்தில் அதை படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பெண்ணின் கொடூர முடிவை தடுத்து நிறுத்தும்படி போலிஸாரிடம் முறையிட்டனர்.

அதை தொடர்ந்து போலிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு அப்பெண்ணை தேடி கண்டு பிடித்தனர். இதுகுறித்து விசாரித்த போது அந்த விளம்பரத்தை தான் வெளியிட வில்லை என அவர் மறுத்தார். அதை நம்பமறுத்த போலிஸார் அவளிடம் இருந்த 2 ஆண் குழந்தைகளை சமூக நல இல்லத்தில் ஒப்படைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி