திரையுலகம்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மோகன்லாலுக்கு சீனியாரிட்டி கேட்ட விஜய்…

மோகன்லாலுக்கு சீனியாரிட்டி கேட்ட விஜய்…

மோகன்லாலுக்கு சீனியாரிட்டி கேட்ட விஜய்… post thumbnail image
ஜில்லா படம், விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்திருப்பதால், தமிழ்-மலையாளம் என இரண்டு மொழியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை 100 சதவிகிதம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பாடல் மற்றும் சண்டை காட்சிகளை மிகப்பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார்கள்

இந்த நிலையில், படத்தில் விஜய் நாயகன் என்பதால், அவரது பெயரைத்தான் முதலில் போடுவதாக இருந்தாராம் இயக்குனர் நேசன். ஆனால், விஜய் குறுக்கிட்டு, மோகன்லால் சாரின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும். காரணம், 35 வருடமாக மலையாள சினிமாவை கலக்கிக்கொண்டிருப்பவர் அவர். ஆனால், நான் 21 ஆண்டுகளாகத்தான் சினிமாவில் இருக்கிறேன் என்றாராம்.

ஆனால், மோகன்லால் விஜய்யின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்றாராம். கடைசியில், விஜய் சொன்னது போலவே சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு மோகன்லாலின் பெயர்தான் ஜில்லா படத்தில் முதல் பெயராக இடம்பெறுகிறதாம். விஜய்யே முன்வந்து இதை சொன்னதால் ஜில்லா படக்குழுவே அவரை பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறதாம் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி