திரையுலகம்,முதன்மை செய்திகள் பிச்சை போட்ட பெண் … சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை…

பிச்சை போட்ட பெண் … சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை…

பிச்சை போட்ட பெண் … சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை… post thumbnail image

ரஜினி அடிக்கடி மாறு வேடத்தில் சென்னை மற்றும் பெங்களூர் பகுதிகளில் நண்பர்களுடன் உலா வருவது வழக்கம். அப்படி வரும் போது நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு முறை இமயமலை கோவிலில் அப்படி மாறுப்பட்ட வேடத்தில் சென்ற போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்காந்து இருந்தார். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அவரது உடையை பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்து தனது கைப்பைளிருந்து 10 ரூபாய் நோட்டை எடுத்து ரஜினியிடம் கொடுத்தார். அவரோ அதை சிரித்து கொண்டே வாங்கி கொண்டார்.

பின்னர், ரஜினி தனது கரை நோக்கி செல்லும் போது தான் அந்த பெண்ணுக்கு தான் பிச்சை போட்டது சூப்பர் ஸ்டார் என்று தெரிய வந்தது. உடனே ஓடி வந்து அந்த பெண் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு இளம் பெண் கூறி தான் ரஜினிக்கு ஒரு பெண் பிச்சை போட்டது தெரிய வந்தது.

நான் மட்டும் ரஜினி இடத்தில் இருந்திருந்தால் அந்த பெண்ணை திட்டி விட்டிருப்பேன். ஆனால் அவரோ அமைதியாக பணத்தை வாங்கி கொண்டார் என்றார் அந்த இளம் பெண்.இந்த நிகழ்ச்சியை ரஜினியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் பதிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி