சன்னியாசம் போன ரஞ்சிதா…

சன்னியாசம் போன ரஞ்சிதா… post thumbnail image
இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் நாடோடி தென்றல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. தொடர்ந்து ஜெய்ஹிந்த், அமைதிப்படை, மக்களாட்சி, அதர்மம், கர்ணா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்த நடிகை ரஞ்சிதா, பின்னர் நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறினார். ஒருகட்டத்தில் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் டி.வி.க்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர். பின்னர் அது தொடர்பான வழக்குகள் நடந்தது, நித்யானந்தாவின் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டது உள்ளிட்ட பல பிரச்னைகள் எழுந்தன. மேலும் இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்த நடிகை ரஞ்சிதா, இன்று சன்னியாசம் வாங்கி கொண்டார். பெங்களூரூவை அடுத்துள்ள, பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் குளத்தில் குளித்து முடித்துவிட்டு, காவி உடை உடுத்தி, நித்யானந்தாவின் 37வது பிறந்த நாளான இன்று நித்யானந்தாவின் ஆசியோடு சன்னியாசம் வாங்கி கொண்டார்.

சன்னியாசம் பெற்ற கையோடு அவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை ரஞ்சிதாவாக இருந்தவர் இனி, மா ஆனந்தமாயி என அழைக்கப்படுவார்.சன்னியாசம் பெற்ற பின்னர் ரஞ்சிதா கூறியதாவது, சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சர்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்துவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

நித்யானந்தாவுக்கு பிறகு நடிகை ரஞ்சிதா தான் அவரது ஆசிரமங்களை நிர்வகிப்பார் என்றும், தற்போது வெளிநாடுகளில் உள்ள ஏதாவது ஒரு நித்யானந்தா ஆசிரமத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி