செய்திகள்,முதன்மை செய்திகள் விட்டாச்சு லீவு …

விட்டாச்சு லீவு …

விட்டாச்சு லீவு … post thumbnail image

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக பள்ளி மாணவ மாணவியருக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து வந்தன. இது நேற்றுடன் முடிவடைந்தது.அடுத்து இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜனவரி 2ம் தேதிமுதல் பள்ளிகள் துவங்கியதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவ மாணவியருக்கு 3ம் பருவ பாட புத்தகங்கள் நான்கு ஜோடி சீருடை மற்றும் நோட்டுகள் உள்ளிட்ட பல பொருட்களை இலவசமாக வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி