செய்திகள்,முதன்மை செய்திகள் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அழகிகள் உல்லாசம்…

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அழகிகள் உல்லாசம்…

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே  அழகிகள் உல்லாசம்… post thumbnail image
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, பிளாட்பார பாஸ்ட்புட் கடை நடத்துவதுபோல, ரோட்டு ஓரம் சொகுசு காரில் கண்ணாடியை மூடி வைத்துக்கொண்டு, விபச்சார அழகிகள் உல்லாசத்தில் ஈடுபட்டனர். ரூ.1,000 கொடுத்தால், உடனடியாக இன்பம் அனுபவிக்கலாம் என்றும், சங்கேத பாஷையில் ரோட்டில், வருவோர், போவோரை எல்லாம் புரோக்கர்கள் பிளாட்பாரத்தில் நின்று அழைத்துக்கொண்டிருந்தனர்.

நேற்று இரவு இதுபற்றி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து சென்றனர்.அழகிகளின் உல்லாச சொகுசு காரை போலீசார் சுற்றி வளைத்தனர். காருக்குள், உல்லாசத்தில் ஈடுபட்ட 5 வெளிமாநில அழகிகள் பிடிபட்டனர். சில அழகிகள் தப்பி ஓடிவிட்டனர். புரோக்கர் ஒருவரும் பிடிபட்டார்.

கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்ட போலீசார் ஏற்கனவே தடை விதித்துள்ளனர். ஆனால், அந்த தடையை காற்றில் பறக்கவிட்டு, விட்டு, இந்த விபசார கும்பல், கறுப்பு பிலிம் கண்ணாடியை மூடிக்கொண்டு, சொகுசு காரில் உல்லாச தொழில் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி