செய்திகள்,முதன்மை செய்திகள் களத்தில் மரணமடைந்த வீரர் …

களத்தில் மரணமடைந்த வீரர் …

களத்தில் மரணமடைந்த வீரர் … post thumbnail image
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் ஜேமி ஸ்கின்னர் (13) , களத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை 14 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. இதில் டைன்கேஸ்டில் எஃப்.சி. அணி சார்பில் விளையாடிய ஜேமி, ஆட்டம் நடந்து கொண்டிருந்த போதே திடீரென மயங்கி கீழே விழுந்தார். களத்தில் இருந்த வீரர்கள் மற்றும் நடுவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சை அளிக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் அவர் இறந்து விட்டார். இந்த தகவலை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி