செய்திகள்,முதன்மை செய்திகள் மசாஜ் சென்டரில் மஜா …

மசாஜ் சென்டரில் மஜா …

மசாஜ் சென்டரில் மஜா … post thumbnail image
சென்னையில் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு புகார்கள் வந்தன.இதுகுறித்து விசாரிக்க பாலியல் தொழில் தடுப்பு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை முழுவதும் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம், மேடவாக்கம் டேங்க் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, வட மாநில இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மசாஜ் சென்டர் உரிமையாளர் திருவல்லிக்கேணியை சேர்ந்த சாந்தியை போலீசார் கைது செய்தனர்.

அங்கு பணியாற்றிய 3 வடமாநில இளம் பெண்களை மீட்டனர்.இதேபோல், ராமாபுரம் மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் செய்வது தெரிந்தது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட மதுரவாயலை சேர்ந்த செலியா பேகம் (40), ஊரப்பாக்கத்தை சேர்ந்த காஞ்சனா (38), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜாபீர் (28), முகமது சாதிக் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து 2 இளம்பெண்களை மீட்ட போலீசார் மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி