செய்திகள்,பொருளாதாரம் பறவைக்கு குறி … மாட்டியது குழந்தை …

பறவைக்கு குறி … மாட்டியது குழந்தை …

பறவைக்கு குறி … மாட்டியது குழந்தை … post thumbnail image
விழுப்புர விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவா (23), விவசாயி. இவர் வீட்டில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தார்.

அதை வைத்து குருவி, கொக்கு, முயல் போன்றவற்றை வேட்டையாடி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பறவைகளை சுடும்போது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த சுகன்யா (21), பிரேம் (19), அய்யனார் என்பவரின் 3 வயது பெண் குழந்தை வைத்தீஸ்வரி (3) ஆகிய 3 பேர் மீதும் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.

மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோயிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று துப்பாக்கியால் சுட்ட சிவாவை தேடினர். ஆனால், அவர் தப்பி ஓடி விட்டார்.தப்பி ஓடிய சிவாவை பின்னர் பஸ் நிலையத்தில் கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி