செய்திகள்,முதன்மை செய்திகள் தயாராகும் காளைகள்…

தயாராகும் காளைகள்…

தயாராகும் காளைகள்… post thumbnail image
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் தை மாதம் பொங்கலை தொடர்ந்து நடைபெறும். இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வருகிற ஜனவரி 16ம் தேதி நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும், மாவட்ட நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் விலங்குகள் நலவாரிய அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த விழாவில் மதுரை மட்டுமல்லாது, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக் கான காளைகள் கலந்துகொள்ளும்.

அதற்காக காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். காளைகளை மண் குவியலில் குத்தச்செய்தும், நீச்சலில் ஈடுபடுத்தியும் பயிற்சி அளித்து வருகின்றனர்.ஜனவரி 15ம் தேதி பாலமேட்டிலும், 16 ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி