அரசியல்,முதன்மை செய்திகள் பறந்து போச்சு சைக்கிள்…

பறந்து போச்சு சைக்கிள்…

பறந்து போச்சு சைக்கிள்… post thumbnail image
கோல்கட்டாவில், முக்கிய சாலைகளில், சைக்கிள் ஓட்டுவதற்கு, போலீசார் விதித்துள்ள தடைக்கு, அம்மாநில அரசு, சட்டப்பூர்வ ஒப்புதல் அளிக்காததால், சைக்கிள் ஓட்டலாமா, கூடாதா என, பொதுமக்கள் குழப்பம் .

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. . , கோல்கட்டாவில், 174 சாலைகளில், போக்கு வரத்து நெருக்கடி மிகுந்த பாதிப்பை சாதாரண மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. அதோடு அவர்களின் வாகனமாக கருதப்படும், சைக்கிள் ஓட்டுவதற்கு, போலீசார் மே மாத இறுதியில்தடை விதித்துள்ளனர்.

இதற்கு, பொதுமக்களிடையே, கடும் எதிர்ப்பு இருந்ததாலும் ,போலீசார், அபராதம் விதிப்பதாலும் , சைக்கிள் ஓட்டுவதை, பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இதுபோல் விதிக்கப்படும் தடைகள், இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். இரண்டு மாதங்களுக்கு மேல், தடையை நீட்டிக்க வேண்டுமெனில், அதற்கு, மாநில அரசின் சட்டப்பூர்வமான ஒப்புதல் தேவை. எனவே, சைக்கிள் ஓட்டுவது குறித்த, எந்த முடிவும் எடுக்க முடியாமல், கோல்கட்டா பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து .,

போலீசாரின் தடை, இரண்டு மாதங்களுக்கு மேல், நீடிக்காது. மாநில அரசு ஒப்புதல் அளித்தால் தான், நீடிக்கும். எனவே, போலீசாரின் தடை, தற்போது செல்லாது. அபராதம் விதிக்கும்நடவடிக்கையை, போலீசார், கைவிட வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே, சைக்கிள் மூலமாகவே, அன்றாட பிழைப்பு நடத்தி வரும், பத்திரிகை ஏஜென்டுகள், கூரியர் டெலிவரி பையன்கள், பால்காரர்கள், தொழிலாளர்கள் ஆகியோர், மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்சரும், திரிணமுல் காங்., தலைவர்களில் ஒருவருமான, மதன் மித்ராவை சந்தித்து, சைக்கிள் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, வாபஸ் பெறும்படி வலியுறுத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி