முதன்மை செய்திகள் பெண்ணை வைத்து சூதாட்டம்…

பெண்ணை வைத்து சூதாட்டம்…

பெண்ணை வைத்து  சூதாட்டம்… post thumbnail image
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், சுகுமார் மண்டல் என்பவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

பல சுற்றுகள் நடந்த சூதாட்டத்தில், அந்த நபரிடம், மண்டல் தோற்றுப் போனார். ‘இழந்ததை பிடிக்க வேண்டும்’ என்ற வெறியில், எட்டாம் வகுப்பு படிக்கும், தன் மகளை வைத்தும், அந்த நபர் சூதாட்டம் ஆடியுள்ளார். அதிலும், தோற்று போனதால், வேறு வழியின்றி, தன் மகளை, திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்து, தொடர்ந்து சூதாட்டம் ஆடியுள்ளார். அதிலும் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து, அந்தச் சிறுமி, சூதாட்டத்தில் வெற்றி பெற்றவருக்கு, மணம் முடித்து கொடுக்கப்பட உள்ளார்.

இதற்கு, இரு குடும்பத்தாரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமணம், அடுத்த மாதம், 22ம் தேதி நடக்கிறது. முன்னதாக, கடந்த, 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், கிராமத்தாரும், உறவினர்களும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். அந்தச் சிறுமியின் வயதை விட, சூதாட்டத்தில் வெற்றி பெற்ற, பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு, இருமடங்கு கூடுதல் வயது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய செய்தி வெளியானதும், மாநில அதிகாரிகள், அந்த திருமணத்தை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி