செய்திகள்,முதன்மை செய்திகள் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் …

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் …

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் … post thumbnail image
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28). இவர் குழந்தை இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் கருவுறுவதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால் அவருக்கு பல கருக்கள் உருவாகியுள்ளன., அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ரேவா மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர். முன்னதாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு இறந்தே 9 குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவமனையை அடைந்ததும் அஞ்சுவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது கர்பப்பையில் மேலும் ஒரு குழந்தை இருந்தது தெரிய வந்தது. நேற்று அதிகாலை அந்த 10வது குழந்தையை பெற்றெடுத்தார் அஞ்சு. ஆனால் அதுவும் மரணித்தே பிறந்துள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் 12 வார வளர்ச்சி மட்டுமே காணப்பட்டதாலும் சரியான பராமரிப்பு இல்லாததாலும் அந்த சிசுக்கள் அனைத்தும் இறந்துள்ளதாக .சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையின் உதவி மேலாளரான மருத்துவர் எஸ்.கே பதக் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி