ஆட்டம் காலி …

ஆட்டம் காலி … post thumbnail image
ஐபிஎல் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு அதிரடி ஆட்டம் தவிர நினைவுக்கு வருவது சியர் லீடர்ஸ் தான். மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட பலர் சியர் லீடர்ஸின் ஆட்டத்தை தான் ஆர்வமாக பார்ப்பார்கள். அவர்கள் ஆடும்போது அரங்கமே அதிருமாக்கும்.

சியர் லீடர்ஸ் பெண்கள் கலர் கலராக உடை அணிந்து ஆடி உற்சாகப்படுத்துவது ரசிகர்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் தலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இடியை இறக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஆனால் வரும் ஐபிஎல் போட்டிகளில் சியர் லீடர்ஸ் ஆட மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணை தலைவர் ரவி சாவந்த் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி