அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் பேரிடர்… உதவும் இந்தியா

பிலிப்பைன்ஸ் நாட்டின் பேரிடர்… உதவும் இந்தியா

பிலிப்பைன்ஸ்  நாட்டின் பேரிடர்… உதவும் இந்தியா post thumbnail image
ஹையான் புயலுக்கு 10 ஆயிரம் பேரை பலிகொடுத்த பிலி்ப்பைன்ஸ் நாட்டிற்கு 15டன் நிவாரணப்பொருட்கள் வழங்கபட்டிருப்பதாக அமைச்சர் சல்மான்குர்ஷித் தெரிவித்துள்ளார்…

கூரை அமைப்பதற்கான தார்பாலின்கள், தரைவிரிப்புகள் ,நீரை சுத்திகரிக்கும் கருவிகள்,போன்றவை நிவாரணபொருட்களாக விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார் … ..

இதனுடன் சுத்தமான குடிநீர்,பிஸ்கட்டுகள், பால் பவுடர், உடனடியாக சமைக்கும் வகையிலான உணவுகள் அனைத்தும் விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார் …

மேலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நீரை சுத்தப்படுத்தவும்..தேவைப்படும் பொருட்களை கப்பல் மூலமும் அனுப்பி வைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவாதகவும் அமைச்சர் சல்மான்குர்ஷித் தெரிவித்துள்ளார். ….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி