இதர பிரிவுகள்,செய்திகள்,முதன்மை செய்திகள் சென்னையின் புதிய வரவு “ஹெலன்” மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையின் புதிய வரவு “ஹெலன்” மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையின் புதிய வரவு “ஹெலன்” மீனவர்களுக்கு எச்சரிக்கை post thumbnail image
வங்கக் கடலில் அந்தமான் அருகே ஹெலன் புயல் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே காவாலி என்ற இடத்தில் நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது…

ஹெலன் புயலால் சென்னையில் கடல் கொந்தளிப்பு…அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது…இருப்பினும் நாகை மீனவர்கள் பலர் கடலுக்குள் சென்றுள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன …

இந்தநிலையில், புதுச்சேரி, கடலூர், பாம்பன், நாகை துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி