செய்திகள்,முதன்மை செய்திகள் ஏ.டி.எம். மையத்தில் துணிகரம்:பெண் வங்கி அதிகாரிக்கு அரிவாள் வெட்டு

ஏ.டி.எம். மையத்தில் துணிகரம்:பெண் வங்கி அதிகாரிக்கு அரிவாள் வெட்டு

ஏ.டி.எம். மையத்தில்  துணிகரம்:பெண் வங்கி அதிகாரிக்கு அரிவாள் வெட்டு post thumbnail image
ஜோதி உதய் (வயது 37) ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர்…
பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற போது ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றார்…
ஜோதி பணம் எடுக்கும் வரை காத்திருந்த மர்ம நபர், சட்டென்று உள்ளே புகுந்து, ஏ.டி.எம். ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார்..அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம நபர், துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். திடீரென்று ஜோதியை தலையில் அரிவாளால் வெட்டினார். இதில், ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்..
அந்த மர்மநபர் 15ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஷட்டரை திறந்து வெளியே வந்து, மீண்டும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

ஏ.டி.எம். வாசலில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் உயிருக்கு போராடிக்கொண்டிருகும் ஜோதியை மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிமான்ஸ் மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜோதி அணிந்திருந்த நகைகள் கொள்ளை போகவில்லை. அவரது பையில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போனை அந்த நபர் எடுத்துச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது

மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் அத்துடன் நின்றுவிட்டதுஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தது. எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகிறார்கள்…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி