அரசியல்,முதன்மை செய்திகள் காங்கிரஸ் அரசுக்கு உயர்நீதி மன்றத்தின் பெரிய ஆப்பு

காங்கிரஸ் அரசுக்கு உயர்நீதி மன்றத்தின் பெரிய ஆப்பு

காங்கிரஸ் அரசுக்கு உயர்நீதி மன்றத்தின் பெரிய ஆப்பு post thumbnail image
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு குவஹாத்தி உயர்நீதி மன்றத்தின் மூலம் பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. சிபிஐ ஒரு அரசியல் சட்டவிரோதமான அமைப்பு. எனவே அது குற்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என்று குவஹாத்தி உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை அளித்துள்ளது. இந்த உத்தரவால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட அது முடிவு செய்துள்ளது.

சிபிஐயானது குற்ற வழக்குகளைப் பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ, குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவோ எந்த விதத்திலும் தகுதி அற்றது. மாநில அரசுகளின் காவல் துறை போல அதை ஒரு சட்டத்திற்கு உற்பட்ட ஒரு அமைப்பாக அணுக முடியாது என்று தெரிவித்துள்ளது.

1963ம் ஆண்டு சிபிஐயை மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அரசானை மூலம் மட்டுமே உருவாக்கியது. அந்த உத்தரவு எந்த முறையிலும் குடியரசுத் தலைவரிடம் அனுப்பி அவரது அனுமதியை மத்திய அரசு பெறவில்லை. மேலும் இதை சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

டெல்லி காவல் துறையின் ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம்தான் சிபிஐ உருவாக்கப்பட்டுள்ளது அதனால் சிபிஐ ஒரு சட்ட விரோத அமைப்பு என்று கூறி பெரிய பிரச்சனையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.

Central Bureau of Investigation shortly called CBI is ‘unconstitutional’ and the agency does not have any powers to investigate crimes is the shocking statement from Gauhati High Court on Wednesday. Indian government’s top investigating agency stands to lose its powers to probe, arrest suspects and file charge-sheets after the statement given by Gauhati High Court. The Centre is likely to challenge an unprecedented this court order in supreme court.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி