திரையுலகம்,முதன்மை செய்திகள் கூட்டத்தோடு சிக்கிய அப்பாடக்கர்…

கூட்டத்தோடு சிக்கிய அப்பாடக்கர்…

கூட்டத்தோடு சிக்கிய அப்பாடக்கர்… post thumbnail image
இன்றைய தமிழ் திரையுலகை கலக்கி கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் சந்தானம், தல அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்,கார்த்தி,சூர்யா மற்றும் ஏறக்குறைய முக்கால்வாசி வெற்றி படங்களை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி என பணம் கொழிக்கும் அனைவருக்கும் யாரோ பெரிய ஆப்பு வைத்திருக்கிறார்கள். கோலிவுட் கண்டிராத அளவிற்கு மேலே குறிபிட்ட அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அஜீத் மற்றும் விஜய் தயாரிப்பாளர்கள் ஒரே நேரத்தில் வருமானவரி துறையினர் பிடியில் சிக்கி இருப்பது கோலிவுட்-ல் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் தீபாவளிக்காக முன் கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. இதே போன்று விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி வீட்டினிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

நேரம் காலம் இல்லமால் நடித்து கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் சந்தானம் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் குறிப்பிடதக்கது. தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கும் நகைச்சுவை நடிகர் சந்தானம் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகளில் ஒரு குழுவினர் முன் கதவை மூடிக்கொண்டு வீட்டின் ஓவ்வொரு அறை அறையாக சென்று சோதனை நடத்தியுள்ளார்கள். சந்தானம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். நண்பர்களுக்காக சில படங்களைத் தயாரித்தார்…சில படங்களை அவர்களுக்காக தயாரித்தும் கொண்டு இருக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார்.

பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது. தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகத்திலும் வருமான வரிதுறையின் ஒரு குழுவினர் சென்று சோதனை நடத்தியுள்ளார்கள். சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. ஒரே நேரத்தில் அனைவர்க்கும் ஆப்படித்தது யார் என்பதே இப்போது கோலிவுட் பரபரப்பு செய்தி….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி