திரையுலகம்,முதன்மை செய்திகள் பை பை கலாய்ச்சி வை…பாடுங்கோ

பை பை கலாய்ச்சி வை…பாடுங்கோ

பை பை கலாய்ச்சி வை…பாடுங்கோ post thumbnail image
தமிழ் திரையுலகில் ஆரம்ப காலத்தில் நடிகர்கள் நடிகைகள் பாடி ஆடி நடித்தார்கள். இப்போது கால சுழற்சியில் மீண்டும் அந்த நாட்கள் வந்து விடும் போல் இருக்கிறது. சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் கதாநாயகர்கள் பாடுவது வழக்கமாக இருந்தது. இப்போது புது வழக்கமாக கதாநாயகிகள் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். “பாண்டியநாடு” திரைப்படத்தில் ரம்யா நம்பீசன் “பை பை கலாய்ச்சி வை” என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடல் இணையதளங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இவரைத் தொடர்ந்து பிந்துமாதவியும் இமான் இசையில் பாட வாய்ப்பு கேட்டு நச்சரித்து வருகிறார். ஒரு படத்திலாவது பாடி விட வேண்டும் என்று லட்சுமி மேனனும் கேட்பவர் எல்லாரிடமும் “பாடுவது தனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறி வருகிறார். சிவா கார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த இன்னொரு நடிகை பிரியா ஆனந்துக்கும் இந்த ஆசை வந்துள்ளதாம்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த் படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் தன்னுடைய பாடும் ஆசையை கூறியிருக்கிறார். யுவனும் ஒரு பாடலை கொடுத்து பிரியா ஆனந்தை பாடவைத்தாராம். ஆனால் பல முறை முயற்சித்தும் பிரியா ஆனந்தால் கடைசிவரை அந்த பாடலை சரியாக பாடமுடியவில்லையாம் கடைசியில் யுவன் கொடுத்த பாடலை பாடாமலேயே வெளியே வந்துள்ளார் பிரியா ஆனந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி